Tuesday, September 11, 2007

Autograph -3

ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவு எழுதறேன். எப்பவும் போல ஆதரவு கொடுக்கனும்.

இரண்டாவது வரை நான் இராஜபாளயத்துல படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இராமனாதபுரத்துக்கு மாற்றலாயிடுச்சு... கட்டு மூட்டைய... அப்பா சின்ன வயசுல வளந்த ஊர் அதனால அவருக்கு ஒரே சந்தோஷம் ஆனா எங்களுக்கோ இஷ்டமே இல்ல. ஆனா என்ன பண்றது...

ரொம்ப கொஞ்சம் தான் எழுதியிருக்கேன். தினமும் எழுதுறேன்...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்









Thursday, February 22, 2007

அய்யோ பயமா இருக்கு…

இணையம் இந்த நூற்றாண்டோட மிக சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கு. அதுலயும் வலைபதிவு அப்படிங்கறது இப்போ நல்லா பிரபலமாகிட்டு வருது. என்னை பொருத்தவரை வலைபதிவு அப்படிங்கறது ஒரு தனி மனிதரோ இல்லன்னா ஒரே அலைவரிசைல இருக்கற ஒரு குழுவோ தங்களோட உணர்வுகள சேமிச்சு வெக்கிற ஒரு இடமாக தான் நினைக்கிறேன். ஆனா இப்போ நடக்கறது என்ன?


ஒருத்தர ஒருத்தர் திட்டறதும், சண்டை போடுறதும், criticize பண்றதும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்த நாம சரியா பயன் படுத்தலையோன்னு தோனுது. மாத்தி மாத்தி சண்டை போடுறதுனாலையோ இல்ல தனிமனித அல்லது ஒரு சமூகத்தயோ குற்றம் சாட்டுறதுனாலையோ நாம் சாதித்தது என்ன?


எத்தனையோ பேருக்கு கிடைக்காத நல்ல நல்ல விஷயங்கள், வசதிகள் நமக்கு கிடைக்குது. அப்படி இருக்கும் போது அதை வைத்து அவர்களுக்கு எப்படி உதவுவது அல்லது வழிகாட்டுவதுன்னு இல்லாம என்னங்க இது? ரொம்ப பயமா இருக்கு நம்ம சமூகத்தை நினைச்சா…